ABDULSALAM YAAEEM TRINCO (பொலிஸ் சார்ஜன்ட் மரணம்)
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் நேற்றிரவு (16) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
முள்ளிப்பொத்தானை- 96ம் கட்டை பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடமைக்காக சென்ற போது மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -பேராறு பகுதியைச் சேர்ந்த
அச்சி மொகம்மது பாரிஸ் (49வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை