ABDULSALAM YAAEEM TRINCO (பொலிஸ் சார்ஜன்ட் மரணம்)

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் நேற்றிரவு (16) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
முள்ளிப்பொத்தானை- 96ம் கட்டை  பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடமைக்காக சென்ற போது மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -பேராறு பகுதியைச் சேர்ந்த
அச்சி மொகம்மது பாரிஸ் (49வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின்  பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.