முல்லை சுனாமி நினைவாலயத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற, ஆழிப்பேரலை 17ஆம் ஆண்டு நினைவேந்தல்

விஜயரத்தினம் சரவணன்
டிசெம்பர்.26

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்நல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2021இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.