ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் YWMA அமைப்பினால் கல்முனையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.

( எம். என். எம். அப்ராஸ் )

ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில்

வை . டப்ளியு . எம். ஏ. (YWMA ) அமைப்பின் பூரண அணுசரணையுடன்,வாழ்வாதார உதவிகள் மற்றும்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத்தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கல்முனை அல் – மிஸ்பாஹ்  மகா வித்தியாலய மண்டபத்தில்   இடம்பெற்றது .

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக

தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கு  உதவி பொருட்கள் வழங்கி வைக்கப் பட்டதுடன்  ,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன  இதன் போது வழங்கி வைக்கப்பட்டது மேலும்பல்கலைகழகத்தில் கல்வியை தொடரும் மாணவி  ஒருவருக்கு  புலமை பரிசில் ,  கல்முனை அல் மிஸ்பாஹ்  மகா வித்தியாலய விஷேட கல்வி பிரிவுக்கு உதவி தொகை வழங்கி என்பன பாடசாலை அதிபரிடம் குறித்தYWMA அமைப்பினரால் வழங்கி வைக்கப் பட்டது .

மேலும் இதன் போது ரஹ்மத் பவுண்டேசனின் அமைப்பினால் YWMA அமைப்பின் தலைவி

தேசமான்ய பவாசா தாஹா மற்றும் கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசாகாசிம் ஆகியோர் ரஹ்மத் பவுண்டேசனினால்  பொன்னாடை போர்த்தி

நினைவுச் சின்னம் வழங்கி

கெளரவிக்கப்பட்டனர்.

இதன் போது YWMA அமைப்பின் தலைவி

தேசமான்ய பவாசா தாஹா , உட்பட அமைப்பின் அங்கத்தவர்கள் , கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள்அமைப்பின் தலைவி பைரூசா காசிம் ,

கல்முனை அல் – மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர்  எம் . ஐ. அப்துல் ரஸாக், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான

ஏ. ஆர்.செலஸ்தினா , விமாலாதித்தன் நந்தினி , விநாகமூர்த்தி புவேனேஸ்வரி ,சம்மாந்துறை பிரதேச சபைஉறுப்பினர் எஸ். எம். நிலுபா , ரஹ்மத் பவுண்டேசன்  அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டகுடும்பங்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.