சீமெந்து தட்டுப்பாட்டு விரைவில் முடிவு!

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் தீர்வு கிடைக்கும் என சீமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6 இலட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவிலிருந்து வந்த கப்பலில் 2 இலட்சம் சீமெந்து மூடைகளும், பாகிஸ்தானிலிருந்து வந்த கப்பலில் 4 இலட்சம் சீமெந்து மூடைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அந்த சீமெந்து மூடைகள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சீமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தைகளில் தற்போது சீமெந்து மூடை ஒன்றின் விலை 1375 ரூபாவாக காணப்படுகின்றது.

எனினும், 1500 ரூபாவிற்கும் அதிக விலைகளிலே சீமெந்து மூடைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.