74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி விற்பனை மும்முரம்….

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்ட  வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை காண முடிகிறது.

எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு  இனம், மதம் ,மொழி, வேறு பாடுகளை  விசேட மத வழிபாடுகள் இப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சுதந்திர தினத்தன்று வீடுகளிலும்,  வர்த்தக நிலையங்களிலும் ,தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய கொடிகள் தற்போது வர்த்தக நிலையங்களில் 50 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதியில் பொது  மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்கின்றதை அவதானிக்க முடிகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.