கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப் பட்டமளிப்பு விழா!!

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 12.03.2022 மற்றும் 13.03.2022 ஆகிய திகதிகளில் பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த கேட்போர் கூட மண்டபத்தில்
இடம்பெறவுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள
இப் பட்டமளிப்பு விழாவானது பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி வே.விவேகானந்தராஜா
தலைமையில் நடைபெறுவதுடன் இவ்விழாவின் 1ஆம் நாள்
அமர்வுகளில் விசேட அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப – தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சந்தன  பீ.உடவத்த அவர்களும், 2ஆம் நாள்
அமர்வுகளில் விசேட அதிதியாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.கபில சீ.கே.பெரேரா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் விசேட  உரையினையும் ஆற்றவுள்ளனர்.
இவ்விழாவில் காலஞ்சென்ற முன்னாள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்
அவர்களுக்கு கௌரவ விஞ்ஞான கலாநிதிப் பட்டமும், சீனித்தம்பி கோபாலசிங்கம் அவர்களுக்கு கௌரவ இலக்கிய முதுமானிப்
பட்டமும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அத்துடன் முதலாவது நாள் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வுகள் மூன்று அமர்வுகளாக இடம்பெறவுள்ளதுடன்,  இதன்போது 883 மாணவர்களும், இரண்டாம் நாள் இடம்பெறவுள்ள மூன்று அமர்வுகளின்போது 1075 மாணவர்களுமாக முதுமானி, இளமானிப் பரீட்சைகளில்
சித்திபெற்ற 1,958 மாணவர்கள் தங்களுக்கான பட்டங்களை இதன்போது பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.