மாட்டுவண்டியில் மாதாந்த அமர்விற்குச்சென்ற கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள்.

எரிபொருள் பற்றிக்குறையைக் கண்டித்து முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் மாதாந்த சபை அமர்விற்கு மாட்டுவண்டியின் சென்றனர்.

முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் முன்றலில் இருந்து இவ்வாறு சபை உறுப்பினர்கள் மூன்று  மாட்டுவண்டிகளில் சபை அமர்விற்குப் புறப்பட்டிருந்தனர்.

குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் க.விஜிந்தன், உபதவிசாளர் ம.தொம்மைப்பிள்ளை, உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், தி.இரவீந்திரன், இ.கவாஸ்கர், க.தவராசா, இ.கஜீதரன்
ஈழ மக்கள் ஜநாயகக்கட்சி உறுப்பினரான இ.ஜெகதீசன், தமிழர் விடுதலைக்கூட்டதியின் உறுப்பினர்களான த.அமலன், மோ.விக்கினா ஆகியோர் இவ்வாறு மாட்டுவண்டிகளில் சபை அமர்விற்குச்சென்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.