எதிர்கட்சித்தலைவர் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசுவதால் பதில் கிடைக்காது
நாட்டு மக்களை வேண்டுமென்று ஆவேசத்திற்கு உட்படுத்தி எதிர்கட்சித்தலைவர் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசுவது போன்று தனது பேச்சுக்களை பேசி வருகின்றார் .உண்மையில் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசினால் எவரிடம் இருந்தும் பதில் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் சனிக்கிழமை(9) இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமையை பயன்படுத்தி எதிர்கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எதிர்கட்சி தலைவரும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.எமது நாடு தற்போது நெருக்கடிகளை சந்தித்துள்ள சூழ்நிலையில் நாட்டு மக்களை வேண்டுமென்று ஆவேசத்திற்கு உட்படுத்தி எதிர்கட்சித்தலைவர் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசுவது போன்று தனது பேச்சுக்களை பேசி வருகின்றார் .உண்மையில் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசினால் எவரிடம் இருந்தும் பதில் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்.
கருத்துக்களேதுமில்லை