இக்கட்டான நிலையில் நாமலுக்கு முக்கிய பொறுப்பு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்க உள்ளதாக தெரியவருகிறது.

இதன் முதற் கட்டமாக நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இதுவரை செய்து வந்த கட்சியின் விரிவாக்கல் பணிகளை நாமல் ராஜபக்ச மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த ஆண்டு வியத் மக அமைப்பினர் பணிகளில் நாமல் ராஜபக்சவை ஈடுபடுத்தி இருந்தார்.

நாட்டின் தற்போது பொருளாதார நெருக்கடியில் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக அந்தக் கட்சியை மறுசீரமைக்கும் அடிப்படை பொறுப்பு நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.