புதிய அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டாரா டலஸ்- மீண்டும் மீண்டும் நெருக்கடிக்குள் கோட்டாபய!

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை, அரச தலைவர் கோட்டாபய தலைமையில் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று கோட்டாபய முன்னிலையில் பதவியேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கும் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை  இந்த அமைச்சரவையில், டலஸ் அழகப்பெரும இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சரவையொன்றை நியமிக்க கோட்டாபய முடிவு செய்தால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் டலஸ் அழகப்பெரும தலைமையில் மேலும் 10 பேர் சுயாதீனமாக செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டுபவர்களுக்கு அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு அழைப்பு விடுத்திருந்தார்.

20 ஆவது திருத்தம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறை ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் அரச தலைவர் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.