சம்மாந்துறை பொலிஸ் நிலையம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

சம்மாந்துறை பொலிஸ் நிலையம் விடுக்கும் முக்கிய அறிவித்தல் .

சம்மாந்துறை வாழ் பொதுமக்களே !
எரிபொருள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையில் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் , நீர்ப்பாசன பொறியியலாளரின் பங்குபற்றுதலுடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் படி கடந்த வருடங்களைப் போன்று தேவையான தேவையான எரிபொருள் தங்களுக்கு கிடைப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின் நீண்ட வரிசை காணப்படுகின்றது . இதற்கு காரணம் சிலர் எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது .
எனவே பொலிஸாரினால் திடீர் சோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு எரிபொருள் பதுக்கி வைத்திருப்போர்கள் சம்மந்தமாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் .
இச் சோதனையின் போது கைப்பற்றப்படும் எரிபொருள் அரச உடமையாக்கப்படுவதுடன் உரிய நபருக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையூடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் .
இப்படிக்கு
பொறுப்பதிகாரி ,
பொலிஸ் நிலையம் ,
சம்மாந்துறை .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.