எரிபொருளுக்காக இந்தியாவுடனான கடன் திட்டம் 200 மில்லியன் டொலராக நீடிப்பு!
May 2nd, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.
அரசாங்கம் அவசரகால எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியாவுடன் நீடித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.
மேலும் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தை நீடிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை