எம்.பிக்கள் மற்றும் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்து செய்தி

நாடு இயல்பு நிலைக்கு திரும்பவும், எல்லோரும் நிம்மதியாக வாழவும் இந்த புனித தினத்தில் பிராத்திப்போம் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி !

மாளிகைக்காடு நிருபர்.

பாவங்கள், தீயன விலக்கி நல்லமல்களினால் நாம் இறைவனுடன் தொடர்புபட்ட ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான புனித ரமழானை அடைந்து இன்று நோன்புப்பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சகலரும் தேக ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் வாழ இறைவன் துணைபுரிய பிராத்திக்கிறேன். நாட்டின் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் தளம்பல்கள் காரணமாக பல்வேறு முரண்பாடுகளுடன் இந்த புனிதமிகு காலத்திலும் கஷ்டத்தை அனுபவிக்கும் எமது சகோதரர்களுக்கும் பல்வேறு காரணங்களினாலும் துயருற்றிருக்கும் அனைவருக்கும் இறைவன் நல்ல சுகத்தையும், பறக்கத்தையும் வழங்கிட எல்லோரும் கையேந்தி பிராத்திப்போம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே இந்த காலகட்டத்தில் ஒற்றுமை புரிந்துணர்வு நிலையாக ஏற்பட வேண்டும் எனவும் சகலருக்கும் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை அமைய  இத்திருநாளில் முஸ்லிம்கள் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என  கேட்டுக்கொள்வதுடன் அல்லாஹ்வை முன்னிறுத்தி பல தியாகங்களைச் செய்து 30 நாட்கள் நோன்பிருந்து இன்று பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

இஸ்லாம் சமாதானத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றது. அதற்கான நாளாக இன்றைய தினத்தை அமைத்துக் கொள்வோம். என்பதுடன் உலகை அச்சுறுத்தும் சகல தீங்குகளிலிருந்தும் எம்மை காக்க சகலரும் துஆ செய்வோம். நிலையானதும், ஸ்திரமானதுமான பொருளாதாரத்தை இலங்கை தேசம் அடைந்து முன்னேற்ற பாதைக்கு எமது நாட்டை கொண்டுசெல்ல இறைவனிடம் நாம் கையேந்தி பிராத்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டை ஒழுங்கான பொருளாதார கொள்கையுடன் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டிய தேவை எமக்கிருக்கிறது : கலாநிதி அன்வர் முஸ்தபா

நூருல் ஹுதா உமர்

பொருளாதாரம் கடுமையாக சீரழிந்து, நாட்டின் ஸ்திரத்தன்மை கடுமையாக தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இலங்கை வாழ் முஸ்லிங்கள் நாட்டின் மேம்பாட்டுக்காக புனிதமிகு இந்த பெருநாள் தினத்தில் பிரார்த்திக்க வேண்டும். தாய் தேசத்தின் மீட்சியிலையே எமது வெற்றி தங்கியுள்ளது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் முஸ்தபா விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மூலைமுடுக்குகள் தொடக்கம் தலைநகரம் வரை தனது அன்றாட வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் மக்கள் வீதிக்கு இறங்கி போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் சமூக ஒற்றுமை இனங்களுக்கிடையிலான பரஸ்பரம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இந்த காலநேரத்தை சரியாக பயன்படுத்தி நாட்டை ஒழுங்கான பொருளாதார கொள்கையுடன் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. அரசியல் கட்சிகளின் அரசியல் பழிவாங்கல்கள், புராதன அரசியல் முன்னெடுப்புக்களினால் சரிந்துள்ள இலங்கை மீள கட்டமைக்கவேண்டிய நேரத்தை அடைந்துள்ளது.

தாய்நாட்டின் சுபீட்சம் சிறந்தமுறையில் அமைய முஸ்லிங்கள் இந்த பெருநாள் தினத்தில் பிராத்திக்க வேண்டும். இன்று எமது நாட்டிலும், உலகம் பூராகவும் புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் சகலருக்கும் என்னுடைய ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் தழைத்தோங்கி ஏழ்மைநிலை இல்லாதொழிய நோன்புப்பெருநாள் தினத்தில் முஸ்லிங்கள் பிராத்தியுங்கள் : அல்- மீஸான் பௌண்டஷன்.

மாளிகைக்காடு நிருபர்

நாடு கஷ்டத்தில் சிக்கி நாமெல்லாம் நடுவீதியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இஸ்லாம் கூறும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம், பரஸ்பரத்தை பேணி எல்லா இலங்கையர்களும் உறுதியான மன நிம்மதியுடனும், விட்டுக்கொடுக்க முடியா சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து நிறைவான செல்வங்கள் ஓங்கி தன்னிறைவு பெற்ற தேசமாக இலங்கை உருப்பெற உழைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதற்கான சக்தியை வழங்கிட எல்லா முஸ்லிம் சகோதரர்களும் இறைவனிடம் கையேந்தி பிராத்தியுங்கள் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா விடுத்துள்ள நோன்புப்பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெருநாள் செய்தியில் மேலும், இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டின் ஏனைய இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வரும் இத்தருனத்தில்  நாட்டில் இன்று நிலவும் அமைதியற்ற சூழ்நிலை சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் அமைதியான நிலைமை உருவாக்கப்பட்டு நாட்டின் இறையாண்மை பலப்படுத்தப்பட வேண்டும். என்பதுடன் ரமழான் உணர்த்தும் உன்னதமான படிப்பினைகளை எமது வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். ஒற்றுமை என்னும் கயிற்றை நாம் இறுகப் பிடித்துக்கொள்வோமானால் எமக்கெதிரான சக்திகளை முறியடிக்க முடியும்.

எமது செயற்பாடுகளை நாங்கள் சீர்செய்து கொண்டு ஒழுக்க சீலர்களாக முன்மாதிரி மிக்க சமூகத்தினராக இருக்க வேண்டும். இதற்கான பாடங்களையும் ரமழான் எமக்கு செயற்பாட்டு ரீதியில் கற்றுத்தருகின்றது. இத்திருநாளில் சந்தோஷமாக பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஈத் முபாரக்!.  நாட்டில் இன நல்லிணக்கம்  சமத்துவம் நீடிப்பதற்கும் முஸ்லிம்கள் எச்சந்தர்பத்திலும் ஒற்றுமையாக இருப்பதற்கும் இத்திருநாளில் அனைவரும் பிரார்த்தனை செய்யவேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ரமழான் கற்றுத்தந்த பாடங்களை நமது வாழ்நாளில் தொடர்ந்து கடை பிடித்து நடப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக – சிராஸ் மிராசாஹிப்

நூருள் ஹுதா உமர்

புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் ஈத் முபாரக் என கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மிராசாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாதம் முழுவதும் பசித்திருந்து, விழித்திருந்து, நல்லமல்கள் பல புரிந்து இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சிகரமான நன்நாளில் ரமழான் கற்றுத்தந்த பாடங்களை நமது வாழ்நாளில் தொடர்ந்து கடை பிடித்து நடப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.

பிறமனிதர்களின் பசியை, பட்டினியை, துயரைப் புரிந்து கொள்கின்ற வாய்ப்பை வழங்கும் ஒரு மாபெரும் ஔடதமாக நோன்பு விளங்குகின்றது. நோன்பு நோற்பதன் மூலமாக இனிய குனம், உளத்தூய்மை ஏழைகளின் துயரை உணரும் தன்மை மனிதநேயம் போன்ற பல்வேறு நற்பன்புகளை ஒரு மனிதன் அடைந்து கொள்கின்றான். மேலும் எமது நாடு இன்று பாரியதொரு பொருளாதார பின்னடைவை எதிர் கொண்டுள்ளது இதன்காரணமாக நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதனால் மக்கள் சொல்லனா துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர் ஆகவே இந்த நிலமை மிக விரைவில் நீங்க இந் நன்நாளில் இறைவனிடம் இருகரமேந்தி பிராத்திப்போமாக.

முஸ்லீம்களாகிய நாம் பிற மத சகோதர இன மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதோடு நாடு எதிர்பார்க்கின்ற நிம்மதி, சமாதானம், நல்லினக்கத்தை அடைந்து கொள்வதற்கு முஸ்லீம்களாகிய நாம் அற்பணிப்புடன் செயற்பட இத்திரு நாளில் திடசங்கற்பம் பூனுவோம். ஈத் முபாரக். என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி நீங்கி நாடு சுபீட்சம் பெற பிரார்த்திப்போம் ! – ஏ.சி.யஹியாகான்

நூருல் ஹுதா உமர்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நீங்கி – சகல சமூகங்களும் சுபீட்சமாக வாழ இப் புனித பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம் என மு.கா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

30 நாட்கள் நோன்பு நோற்று – அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்ட நாம் – அதே பாதையில் எமது எதிர்கால வாழ்க்கை முறையையும் நிலை நிறுத்திக்கொள்ள பிரார்த்திப்போம். கடந்த நோன்பும் பெருநாளும் எம்மை வீட்டோடு அமரச் செய்துவிட்டது. கொரோனா கொடூரம் அன்று போல் இன்றும் எம்மை வதைக்கின்ற இக்காலத்தில் அவற்றில் முழு உலக மக்களையும் பாதுகாக்கவும் அக் கொடிய நோயிலிருந்து உலகம் மீண்டெழவும் பிரார்த்திப்போம்.

இலங்கை – இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. இந்த நெருக்கடி நீங்கி முழு மக்களும் சுபீட்சம் பெறவும் இன்றைய பெருநாள் தொழுகையில் இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்.புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.