நுணாவிலில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர் மாய்ப்பு!!!!!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் மத்திப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் 02/05 திங்கட்கிழமை காலை தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
நுணாவில் மத்தி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 21வயதான கஜீபன் என்ற இளைஞனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இளைஞனது சடலம் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.