பிரான்சில் இருந்து யாழ். திரும்பியவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில், நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
.
யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்தார்.
இவர் தற்போது பிரான்ஸில் வசித்துவருகின்றார் எனவும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது, நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை