விமானப் படை சிப்பாய் தற்கொலை!!!
மொரகொட விமானப்படை தளத்தில் நேற்று (11) சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மஹவ, மடியாவ, தும்புல்லேகம, ஹேரத் இல்லத்தைச் சேர்ந்த கமராலால்கே பிரியந்த குமார (37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கவரக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை