துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவு ரத்து செய்யப்படும்! – உறுதியளித்தார் ரணில்

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை ரத்து செய்வதாக புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கலவரம் மீண்டும் தொடங்கினால் மட்டுமே பாதுகாப்புப் படையினருக்கு இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து அரச தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், தமது கட்சியைச் சேர்ந்த எவரும் அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் வகிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.