கொழும்பு ஆர்ப்பாட்டக்களத்தில் வெசாக் நிகழ்வு…

கொழும்பு – காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்ந்து 37வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று வெசாக் தின நிகழ்வு அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நிகழ்வினை வண்ண வெசாக்கூடுகள் அமைத்தும், மரவள்ளி கிழங்கு மற்றும் பாற்சோறு பொது மக்களுக்கு பகிர்ந்தும் கோலாகலமாக கொண்டாடி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று மாலை அதிகளவான கலை அம்சங்கள் மற்றும் அதிக தோரணைகள், டிஜிட்டல் தோரணைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.