சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றணுமா ?

சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றணுமா ?

இயற்கையிலேயே இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம் செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம் போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும்.

நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

ரோஸ் வாட்டர்:
இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பசுப்பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் பூசிய பிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாக, மென்மையாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு:

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து நன்கு சருமத்தில் பூசிய பின்னர் 10 நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவதோடு, சருமம் சிவப்பாகவும் மாறும்.

வெள்ளரிச்சாறு:

வெள்ளரிக்காயில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டுள்ளதால், இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து, சாறாக அரைத்து எடுத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி வந்தால் சருமம் சிவப்பாக காணப்படும்.

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கிலும் உள்ள பிளிச்சிங் தன்மை அதிகமாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையை அகற்ற உதவியாக இருப்பதால், இதை சாறுகளாக அரைத்து எடுத்து, இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் சருமத்தில் பூசிய பின் சில நிமிடம் கழித்து, சருமத்தை கழுவி வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.

பட்டை பொடி:

அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடியை நன்கு கலந்து தினமும் சருமத்தில் பூசிய சில நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமம் மென்மையாக காணப்படும்.

 

தயிர்:
தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தினமும் தடவி நன்கு மசாஜ் செய்துபிறகு, 10 நிமிடம் கழித்து சருமத்தை கழுவி வந்தால், சருமம் பொலிவுடன் காணப்படும்

தேங்காய் நீர்:

தேங்காய் நீரை இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் பூசுங்கள் பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் தினமும் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.