பிரேத பரிசோதனைக்கு உள்ளாகும் சடலங்கள் வீடுகளில் வைக்கும் நேரத்தைவிட மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் இருக்கும் நேரமே அதிகம். மன்னார் பிரஜைகள் குழு 

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் பகுதியில் திடீர் மரணங்களுக்கு உள்ளாகும் சடலங்களை வீடுகளில் வைத்து மரியாதை செலுத்துவதைவிட மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைத்து கவலை போக்கும் செயல்பாடே அதிகமாக காணப்படுவதாக மன்னார் பிரஜைகள் குழு  மன்னார் பொது வைத்தியசாலை அத்தியட்சகர் க.செந்தூர்பதிராஐhவை சந்தித்து கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் ...

மேலும்..

ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவின்றி கருத்து வெளியிடுவதை நிறுத்தவேண்டும்.முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன் பொதுபலசேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவில்லாது கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரவித்துள்ளார். அத்தோடு வடகிழக்கு தாயகப் பரப்பில் இராணுவம் நிலைகெண்டிருப்பதை எப்போதும் தாம் ஏற்றுககொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். வட,கிழக்கு ...

மேலும்..

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்  கையொப்பமிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எவ்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா,  உப தலைவர் செந்தில் ...

மேலும்..

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை நிகழ்வொன்று இன்று (வெள்ளிக்கிழமை)  காலை இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் மூன்றுமுறிப்பு பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், வர்த்தகசங்க ...

மேலும்..

வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் கைதாகி பிணையில் விடுதலை!

வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு பொலிஸ் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 797 தொற்றாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த 42 கடற்படை வீரர்களும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 03 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 17 கடற்படையினர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 17 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை 443 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் ...

மேலும்..

வேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பின்பற்ற வேண்டிய கோட்பாடுகள், நெறிமுறைகள் மற்றும் ஊடக வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பு வெளியான திகதி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை குறித்த நெறிமுறைகள் செல்லுபடியாகும் ...

மேலும்..

கடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்

வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மரணமடைந்துள்ளார். வவுனியா- கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது 71) என்ற தந்தையே இன்று, தனது வீட்டிலுள்ள  மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து  உயிரிழந்துள்ளார். வவுனியாவில் ...

மேலும்..

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது – ஜனாதிபதி

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சுற்றாடல் பாதுகாப்பு ...

மேலும்..

யாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். “கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்குக் கொண்டு மற்றொரு துவிச்சக்கர ...

மேலும்..

அரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பகுதியில் உள்ள வடிச்சல் பகுதிகளை ஏறாவூர் நகரசபை நிரப்பிவருவது தொடர்பில் ஆராயச்சென்ற நீர்பாசண திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. ஏறாவூர் முஸ்லீம் பிரிவு மற்றும் ...

மேலும்..

மாத்தறையை படையெடுக்க ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்: அச்சத்தில் விவசாயிகள்

மாத்தறை – கிரிந்த எனும் இடத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். குறித்த பகுதியில் சோளப்பயிர்ச்செய்கை மற்றும் வாழைச்செய்கையே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்  குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த வெட்டுக்கிளிகளினால் ஏனைய பயிர்ச்செய்கையும் பாதிப்புக்கு உள்ளாகுமென அப்பகுதியிலுள்ள விவசாயிகள் ...

மேலும்..

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

யாழ்ப்பாணம்- அச்சுவேலி, பத்தைமேனி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் ...

மேலும்..