August 22, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டு. மயிலத்தமடுவுக்குச் சென்ற மத தலைவர்கள் ஊடகவியலாளர் 6 மணிநேரம் தடுத்து பின் விடுவிப்பு!  பௌத்த தேரர் கொண்ட குழு அட்டகாசம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது, காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு செவ்வாய்க்கிழமை சென்ற சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேரை பௌத்த தேரர் ...

மேலும்..

எனது ஆதங்கத்தையே மாத்தளையில் கூறினேன்! மாறாக அரசியல் செய்யவில்லை என்;கிறார் ஜீவன்

மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன். மாறாக அரசியல் செய்யவில்லை. மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. எனவே, மலையக மக்களுக்கான ...

மேலும்..

அரச தொழிற்சாலைகள், திணைக்கள பிரிவுகளை உள்ளடக்கிய விரைவான தடயவியல் கணக்காய்வு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்

அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய துரித தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தனுக்கு ஆலோசனை வழங்கினார். இதன் மூலம் நிறுவனத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் ...

மேலும்..

அரசியல் நோக்கங்களுக்காக மலையகத்தை சீர்குலைக்காதீர்! இராதாகிருஸ்ணன் வலியுறுத்தல்

ஆளும் தரப்புக்கு ஓர் உறுப்பினர் சென்றால் அவருக்கு மூன்று மதுபானசாலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம். பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளை புதிதாக அமைப்பது பாரிய சமூக பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என ...

மேலும்..

தொல்லியல் சின்னங்கள் கண்டெடுக்கப்படும் இடங்களை பௌத்த இடமாக காட்ட முயற்சிப்பதனாலேயே பிரச்சினை!  முஷாரப் எம்.பி. சுட்டிக்காட்டு

நாட்டில் உள்ள தொல்லியல் சின்னங்கள் ஒரு சாராருக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அவை முழு நாட்டு மக்களினதும் சொத்தாகும் . என்றாலும் தொல்லியல் சின்னங்கள் அடையாளம் காணப்படும் போது அந்த இடத்தை பௌத்த இடமாக காட்ட முயற்சிப்பதாலேயே பிரச்சினைகள் உருவாகின்றன என ...

மேலும்..

மதுபானங்களின் விலைகளை குறைக்க டயனா கோரிக்கை!

இரவு 10 மணிக்கு பின்னர் உறங்குவதற்காக சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தரவில்லை. இரவு பொருளாதாரத்தை அமுல்படுத்தாவிட்டால் சுற்றுலாத்துறையில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. மதுபானங்களின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும். இல்லாவிடின் சாரயம் காச்சி குடிப்பவர்களினதும் போதைப்பொருள் பாவனையாளர்களினதும் எண்ணிக்கை அதிகரிக்கும். அது ...

மேலும்..

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் முன்னிலையில், இன்று பிற்பகல் வரலாற்று சிறப்பு மிக்க மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம ...

மேலும்..

ரத்வத்த தோட்ட சம்பவத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

ரத்வத்த தோட்ட சம்பவத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த சம்பவம் தொடர்பாக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் நாமும் ...

மேலும்..

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குருந்தூர் விகாரைக்கு சென்ற விகாராதிபதியை, அரசியல்வாதிகளுடன் வருகைத் தந்திருந்த சில காடையர்கள் தகாத வார்தைகளால் பேசி, அங்கிருந்து வெளியேற்றியமையானது ...

மேலும்..

சுற்றுலாத்துறைக்கு சிறந்த வேலைத்திட்டம் அவசியம் – தேசிய மக்கள் சக்தி

சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப அரசாங்கமும் மத்திய வங்கியும் இணைந்து சிறந்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் தேசிய சுற்றுலாக் கொள்கை ...

மேலும்..

வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ்- சுற்றுலாப் பணியக அதிகாரிகள் திடீர் சந்திப்பு!

வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள்,  நேற்றைய தினம் (21) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ”சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு வருகை தரும் கோர்டிலியா என்ற உல்லாசப்பயணக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விசேட வசதிகளை ஏற்படுத்திக்  கொடுப்பது” ...

மேலும்..

புராதனச் சின்னங்கள் மதங்களுக்குரியவை அல்ல : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க!

நாட்டின் புராதன சின்னங்களை எதிர்க்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு, குருந்தூர் ...

மேலும்..

நான் ரஜனிகாந் அல்ல : மனோ கணேசன்!

யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசுக்கு சொந்தமான ரத்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் சுகாதார பணியாளர் நலனில் கவனம் இல்லை!

  யாழ்ப்பாண மாநகர சபை சுகாதாரதுறையில் பணியாற்றும் கழிவகற்றல் பணியாளர்கள், அத்தியாவசிய பாதுகாப்பு நலன்களில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் விசேட கவனம் செலுத்தவில்லை என சமூக நலன் விரும்பிகள் விசனம் தெரிவித்துள்ளனர். யாழ்.மாநகரசபையில் தொழில் புரியும் சுகாதாரதுறை (கழிவகற்றல் ) பணியாளர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளாது, ...

மேலும்..

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உணவகங்களில் திடீர் சோதனை

  நூருல் ஹூதா உமர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸின் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவு உணவகங்களில் திடீர் சோதனை இடம்பெற்றது. தற்போதைய காலகட்டத்தில் ஹோட்டல்களின் தரத்தைப்பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் உணவகம்களில் திடீர் ...

மேலும்..

சாய்ந்தமருதிலுள்ள பெண்கள் அமைப்புக்களுக்கு ஜனாஸா அடக்கும் செயன்முறைக் கருத்தரங்கு!

  நூருல் ஹூதா உமர் மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்கா மற்றும் வை.எம்.எம்.ஏ. - மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை சாய்ந்தமருது சைனிங் ஸ்டார் பெண்கள் அமைப்பின் காரியாலயத்தில் பெண்களுக்கான ஜனாஸா அடக்கும் முறை சம்பந்தமான செயன்முறை கருத்தரங்கு நடைபெற்றது. மனித மேம்பாட்டு அமைப்பின் கலாசார ...

மேலும்..

எலைட் கழகத்துடன் கலந்துரையாடல் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

  நூருல் ஹூதா உமர் மனாரியன் 88 அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க மருதமுனை எலைட் விளையாட்டு கழகத்துடனான சிநேக பூர்வமான கலந்துரையாடல், பர்வின் ட்ரடிங் நிறுவனம் மற்றும் லதான் அக்ரோ இண்டர்நேசனல் நிறுவன பணிப்பாளர் அல் ஹாஜ் கலில் முஸ்தபாவுடன் மருதமுனை பிரதான வீதியில் ...

மேலும்..

குப்பைக்குள் வீசப்பட்ட 8 பவுண் தங்க நகைகளை மீட்டுக்கொடுத்த சாவகச்சேரி நகரசபை சுகாதாரபிரிவு!

  யாழ்.சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

குற்றச்சாட்டுக்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கோம்! அநுரகுமார திட்டவட்டம்

தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் பொதுமக்களது நிதியை துஷ்பிரயோகம் செய்ததில்லை என அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்தார் ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று திங்கட்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்றது. திங்கட்கிழமை அதிகாலை, சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எஸ். கியூ. 469 என்ற விமானம் மூலம் அதிகாலை 12.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு ...

மேலும்..

1000 மரக்கன்றுகளை நடும் செயற்திட்டம் ஆரம்பமானது!

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில், பருவகால மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள ' 1000 மரக்கன்றுகள் நடும் செயற்திட்டம்'  யாழ். செம்மணி பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளர் இ.பகீரதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ...

மேலும்..

பணிப் பெண்ணாகச் சென்ற பெண் சாவு: உடலை கொண்டுவர உதவ கோரிக்கை!

சவூதி அரேபியாவுக்கு கடந்த வருடம் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற ராஜேந்திரன் தினகேஸ்வரி எனும் பெண் உயிரிழந்துள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஹற்றன் டிக்கோயா, பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இராஜேந்திரன் தினகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என்று ...

மேலும்..