மேலும் ஓர் ஏவுகணையைப் பரிசோதித்த வடகொரியா

வடகொரியா, பாலிஸ்டிக் ஏவுகணை என சந்தேகிக்கப்படும் ஏவுகணையைச் சோதனை செய்துள்ளது.

வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக சந்தேகிப்பதாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


யுஎஸ்எஸ் டொனால்ட் ரீகன் என்ற கப்பல் தென் கொரிய கிழக்கு கடற்கரையில் கூட்டு இராணுவப் பயிற்சிக்காக வந்தபோது இந்த ஏவுகணைச் சோதனை செய்யப்பட்டது.

ஜூன் மாதத்துக்குப் பின் வடகொரியா இது போன்ற அணு ஆயுத ஏவுகணையைச் சோதனை செய்தது இதுவே முதல் முறையாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்