ஜப்பானில் குவிந்த உலக தலைவர்கள்! சற்று முன் ஆரம்பமான ஷின்ஷோ அபேவின் இறுதி சடங்கு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜப்பான் சென்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி நரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்து, சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றவரான அவரது திடீர் மறைவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஷின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவில் அந்நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு (இலங்கை நேரப்படி மாலை 10.30 மணிக்கு) தொடங்குகிறது.

 

கலந்து கொள்ளவுள்ள நாட்டவர்

ஜப்பானில் குவிந்த உலக தலைவர்கள்! சற்று முன் ஆரம்பமான ஷின்ஷோ அபேவின் இறுதி சடங்கு | Shinzo Abe Funeral Participated Countries Today

இந்த இறுதிச் சடங்கில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சிங்கப்பூர் பிரதமர் லி சீன் லூங், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோி அல்பனிஸ், வியட்நாம் அதிபர் கூயென் ஜூவான் புக், தென் கொரிய பிரதமர் ஹான் டக் சூ, பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா டடெர்டீ, இந்தோனேஷிய துணை அதிபர் மருஃப் அமின், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்செல் உள்பட 50 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.