அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ்க்குடும்பம்

அவுஸ்திரேலியா- கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தமிழ் குடும்பம் உயிரிழந்தமை குறித்து கொலை தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ்க்குடும்பம் | Tamil Family Who Died In Australia

 

யெராபி குளத்திலிருந்து தாயினதும் இரண்டு சிறுவர்களினதும் உடல்களை காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

இது குறித்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது,இதனை கொலை தற்கொலை என கருதுகின்றோம் இதில் உயிரிழந்த மூவருக்குமே தொடர்புள்ளதாக கருதுகின்றோம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ்க்குடும்பம் | Tamil Family Who Died In Australia

 

அதேவேளை விசாரணைகள் குழப்பமானவையாக காணப்படுவதாலும் இன்னமும் பூர்த்தியடையாததாலும் உயிரிழப்புகளிற்கான காரணங்கள் குறித்த தெளிவான அறிக்கையை மரணவிசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யெராபி குளத்தில் உடல்கள் காணப்படுவதை பார்த்த ஒருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து காவல்துறையினர் குளத்திலிருந்து தாயினதும் இரு மகன்களினதும் உடல்களை மீட்டிருந்தனர். குளத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டடிருந்த வாகனமொன்றையும் காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.