மோசமான உடல்நிலை! மருத்துமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட சமந்தா?

நடிகை சமந்தாவின் உடல்நிலை மீண்டும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. நடிகை சமந்தா சமீபத்தில் தனக்கு தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் விரைவில் முழுவதும் குணமடைவேன் என்றும் கூறியிருந்த நிலையில், சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பு சமந்தா கண்ணீர் மல்க தனது நோய் குறித்து பேசியிருந்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்த நிலையில் கடந்த வருடம் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.

பின்பு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவருக்கு யோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வருகின்றார்.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?

யசோதா படம் வெற்றியினைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆம் நடிகை சமந்தாவின் உடல்நிலை மீண்டும் மோசமாகியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.