ADK பற்றி ஷிவினின் குற்றச்சாட்டு: கொந்தளிக்கும் இலங்கை பெண்

பிக்பாஸ் நீதிமன்றத்தை ஷிவின் நேற்று அவமதித்ததாக ஜனனி குற்றம் சுமத்தியுள்ளார்.

வெளியேறிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இதில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் கடந்த ஐந்து வாரங்களாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆறாவது வாரத்திற்காக நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏடிகே நீதிபதியாகவும் அசீம், ஆயிஷா, சிவின் ஆகியோர் வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADK பற்றி ஷிவினின் குற்றச்சாட்டு: கொந்தளிக்கும் இலங்கை பெண் | Janani Fights In Bigg Boss

நீதிமன்றத்தின் முதல் வழக்கு

மேலும் நேற்றைய தினம் முதல் வழக்காக அமுதவாணன் அம்பாகவும் ஜனனி வில்லாகவும் செயல்பட்ட வழக்கு விக்ரமனுக்கு எதிராக பேசப்பட்டது.

இதில் அமுதவாணன் , ஜனனி தரப்பு வெற்றி பெற்றுள்ளது. இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத ஷிவின் நீதிமன்றத்தில் கத்தி ஆர்பாட்டம் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ஜனனி ஷிவினிடம் சென்று “நீ பேசியது தவறு நீதிபதியின் தீர்ப்பை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டியா? ” இது போன்ற கேள்விகளை கேட்டுள்ளார்.

இதற்கு ஷிவினும் தனலெட்சுமியும் இது ஒரு தீர்ப்பே இல்லை என்று வாதித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.