முன்னோடியில்லாத எதிர்விளைவுகளை தென்கொரியா- அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்: வட கொரியா அச்சுறுத்தல்!

தென் கொரியாவும் அமெரிக்காவும் எதிர்வரும் வாரங்களில் திட்டமிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால், முன்னோடியில்லாத வகையில் தொடர்ச்சியான மற்றும் வலுவான எதிர்விளைவுகளை கட்டவிழ்த்து விடுவதாக வட கொரியா அச்சுறுத்தியுள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் வருடாந்திர ஃப்ரீடம் ஷீல்ட் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக, வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

மேலும், தென்கொரிய- அமெரிக்கா கூட்டுப் இராணுவப் பயிற்சிகள், வட கொரியா மீதான படையெடுப்புக்கான தயாரிப்புகள் என்று பியோங்யாங்கின் நீண்டகால கூற்றை செய்தித் தொடர்பாளர் மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்க-தென் கொரிய பயிற்சிகளை வட கொரியா மீது நீண்ட கால இராணுவ முனையைப் பெறுவதற்கான அவர்களின் ஆபத்தான முயற்சி என்று விபரித்த செய்தித் தொடர்பாளர், கொரிய தீபகற்பத்தின் நிலைமை மீண்டும் அதிகரிக்கும் பதற்றத்தின் கடுமையான சுழலில் மூழ்கும் என்று கூறினார்.

இதனிடையே, பென்டகனில் உள்ள கணினி உருவகப்படுத்துதல், வட கொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகவும், அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதலைத் தடுக்க அணுசக்தி உட்பட அதன் முழு திறன்களைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் திறனை எவ்வாறு அதிகரிப்பது என்பதைப் பற்றி விவாதிக்கவும், தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.