கவிநயம் சுடர்மணி’ இந்திய விருதுக்கு கலாபூஷணம் ஸக்கியா சித்திக் பரீட்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இந்திய திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, பசுமை வாசல் பவுண்டேஷன்
நடாத்திய கோடைக்கால ‘நட்சத்திர சுடர் மணி – 2023’ விருதுகள் போட்டியில்,
கவிதைப் பிரிவில் இலங்கையிலிருந்து பங்கு பற்றி சிரேஷ்ட எழுத்தாளரும்,
ஆசிரியரும், கவிஞருமான கலாபூசணம் ஸக்கியா சித்திக் பரீட், ‘கவிநயம் சுடர்
மணி’  விருதைத் தட்டிக் கொண்டார்.

இந்திய பசுமை வாசல் பவுண்டேஷன் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சமூகப்பணி,
இலக்கியப் பணி, இயற்கைப் பணி எழுத்துப்பணியில் ஈடுபட்டு வருகின்ற பல்துறை
சாதனையாளர்களுக்கு தொடர்ந்தும் பல தலைவர்களின் பேரில் பிறந்த நாளுக்கு
விருது வழங்கி வருகிறது. அந்தவகையில், கோடைகாலத்தில் தங்களது திறமைகளை
வெளிக் கொணர்ந்து அவர்களின் படைப்புகளின் தன்மைகளை வெளிக்கொணரவும் கோடை
காலத்தில் முடங்கிக் கிடந்தவர்களின் படைப்பாளிகளை உலகறியச் செய்யவும் கதை,
கவிதை, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளை நடத்தியது.

இதில் 600 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிக்
காட்டியிருந்தனர்.

சிரேஷ்ட எழுத்தாளரும் கவிஞருருமான கலாபூசணம் ஸக்கியா சித்திக் பரீட்,
இதுபோன்று இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று இலக்கிய சமூகம்
தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.