மலேசியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 141 பேர் கைது…

மலேசியாவின் Hentian Kajang பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 6 குழந்தைகள் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 141 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களில் 65 பேர் இந்தோனேசியர்கள், 59 மியான்மரிகள், 9 பேர் நேபாளிகள் மற்றும் இன்னும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் 8 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியாகி தங்கியிருத்தல், பார்வையாளர் விசா தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களின் கீழ் இவர்கள் கைதாகியுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் Semenyig குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.