சீனாவில் 8 மாதங்களில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் மரணம்!

சீனாவில், எட்டு மாதங்களில் பின் முதன்முறையாக ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

அவர், ஹெபெய் (Hebei)மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தின் பல நகரங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

சீனாவில், இன்று புதிதாக 138 பேரிடம் வைரஸ்  தொற்று அடையாளம் காணப்பட்டது.

அவர்களில் 124 பேர், உள்ளூரில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 81 பேர், ஹெபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், 43 பேர், வடக்கிழக்கு மாநிலமான ஹெய்லொங்ஜியாங்கைச் (Heilongjiang) சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், சீனாவில் அறிகுறிகளின்றி 78 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.