கியூபாவின் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

கியூபாவின் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

இதன்மூலம், தமது குடும்பத்தின் ஆறு தசாப்தகால ஆட்சியை அவர் முடிவுக்கு கொண்டு வருகின்றார்.

89 வயதான ராஹுல் காஸ்ட்ரோ, கட்சியின் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒரு இளைய தலைமுறையினருக்கு ஆர்வமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனப்பான்மையும் நிறைந்த தலைமையை ஒப்படைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக பதவியேற்க உள்ளவர், கட்சியின் நான்கு நாள் மாநாட்டின் தெரிவுசெய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1959 ஆம் ஆண்டு புரட்சியுடன், ஆரம்பித்த தலைமைத்துவ பயணம், 6 தசாப்தத்தின் பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

பிடல் காஸ்ட்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு தலைமைத்துவத்தை தமது சகோதரரான ராஹுல் காஸ்ட்ரோவிடம் கையளித்தார்.

பின்னர், கடந்த 2016ஆம் ஆண்டு தமது 90 ஆவது வயதில் அவர் காலமானமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.