பிரதான செய்திகள்

பிரித்தானிய கல்வி திட்டத்தில் மாற்றம் – ரிஷி சுனக் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தினை கட்டாயப்படுத்தும் திட்டத்தை  பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது எண்ணற்ற தன்மையை சமாளிக்கவும், இளைஞர்களை பணியிடத்திற்கு சிறப்பாக சித்தப்படுத்தவும் முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் உரையில், சுனக் ...

மேலும்..

தினேஷ் சாப்டர் மரணம்! மனைவிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையின் போது சாட்சியமளிப்பதற்காக அவரின் மனைவி அழைக்கப்பட்டுள்ளார். ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை சாட்சியங்கள் திறந்த நீதிமன்றில் அழைக்கப்படாமல் நீதவானின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (04) ...

மேலும்..

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக் ஆண்டகை கடந்த 31 ஆம் திகதி தனது 95ஆவது வயதில் அவர் இயற்கை எய்தியிருந்தார். இதற்கமைய திருத்தந்தையின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. எனவே திருதந்தையின் மறைவுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நாளை (05.01.2023) தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ...

மேலும்..

தன்னை பஸ் மேன் என கிண்டல் அடிக்கின்றனர்-சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ பஸ்களை வழங்குவதே இன்று சகலரினதும் பேசு பொருளாக மாறியுள்ளதாகவும், மேலும் சிலர் சஜித் பஸ்ஸை செலுத்துவதாக தெரிவிக்கின்றனர் எனவும், அதனால் தனக்கு பஸ் மேன் என கிண்டலடிக்கின்றனர் எனவும், இவ்வாறு கிண்டலடிப்பது VIP மற்றும் VVIP சோசலிசவாதிகள் எனவும், ...

மேலும்..

தன் இரங்கல் செய்தியை தெரிவிக்க தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கான தீர்வு! நாளை ரணிலை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை ...

மேலும்..

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் – அதிபர் ரணிலிடம் உறுதியளித்த ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடனான ...

மேலும்..

பாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நடவடிக்கை -சுசில் பிரேமஜயந்த

கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் நினைவாற்றல் திட்டத்தை அதிகரிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இன்று காலை ஆரம்பமானது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், புதன்கிழமைகளில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இடம்பெறும் என்றார். “மார்ச் ...

மேலும்..

வடக்கில் அதிகரிக்கும் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

வடமாகாண மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும். இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு ...

மேலும்..

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் 10% குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பஸ் கட்டணங்கள் இன்று ...

மேலும்..

ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாய் – மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல..!

தனது வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, சரியான மின்சாரக் கட்டண பட்டியல் கிடைக்காததே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன், அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் ...

மேலும்..

முக்கியப் பிரமுகா்களை அச்சுறுத்தும் ‘பாஸ் ஸ்கேம்’

தமிழகத்தில் இணையவழி மோசடிகளின் வரிசையில், "பாஸ் ஸ்கேம்´ எனும் புதிய வகை மோசடி முக்கியப் பிரமுகர்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இணையம், சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. உதாரணமாக சென்னையில் ...

மேலும்..

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனு ஜனாதிபதியிடம்

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனுவை எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மனுவில் கையொப்பமிடும் பணி தற்போதும் இடம்பெற்று வருகின்றது., நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு ஏற்கும் திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ...

மேலும்..

முட்டை இறக்குமதியால் வைரஸ் தொற்று ஏற்படலாமென எச்சரிக்கை!

முறையான கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதிசெய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அமைச்சரவையின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்று (3) ஊடக ...

மேலும்..