May 28, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புங்கையூர் புலம்பெயர் உறவுகளின் ஆதரவில் புங்குடுதீவின் விளையாட்டுதுறை வளர்ச்சிக்கு!

புங்குடுதீவில் மாபெரும் கிரிக்கெட் ( ஊசுஐஊமுநுவு )  , வலைப்பந்தாட்ட ( Nநுவுடீயுடுடு )  சுற்றுப்போட்டித்தொடர்  . பாரியளவிலான பரிசுத்தொகையுடன் நடத்தப்படவுள்ள இந்தச்சுற்றுப்போட்டிகளில்  புங்குடுதீவிலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற இரு அணிகளும் ,  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு அணிகளும் , தீவகத்தைச் சேர்ந்த ஏனைய ...

மேலும்..

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்புகோருவது பழக்கமாகிவிட்டது!  சரத் வீரசேகர கடும் விசனம்

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு பின்னர் மன்னிப்பு கோருவது தற்போது பழக்கமாகி விட்டது. அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட வகையில் புத்த சாசனத்துக்கு எதிரான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாகக் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் ...

மேலும்..

வற்றாப்பளை அம்மன் வைகாசி பொங்கல் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி மாவட்ட செயலாளர் தெரிவிப்பு

சண்முகம்  தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின்  வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தை முன்னிட்டு பொங்கல் விழா ஏற்பாடு தொடர்பான இரண்டாவது முன்னாயத்த  கலந்துரையாடல் கடந்த அவள்ளிக்கிழமை  வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில்  காலை பத்து  மணிக்கு ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரச அதிபராக கனகேஸ்வரன் நியமனம்!

சண்முகம்  தவசீலன் முல்லைத்தீவு  மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றிவந்த க.விமலநாதன் கடந்த 20.05.2023 அன்று அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்று சென்றநிலையில்  முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய கனகசபாபதி கனகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக உள்நாட்டு அலுவல்கள் ...

மேலும்..

நற்பிட்டிமுனையில் இரத்ததான முகாம்

( வி.ரி.சகாதேவராஜா) நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிவசக்தி வித்யாலயத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் உதவியோடு 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' என்ற திட்டத்தின் கீழ் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது . நேற்று ...

மேலும்..

புலமையாளர்கள் கௌரவிப்பு விழா

( வி.ரி.சகாதேவராஜா) இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியின் மகத்துவம் 2 எனும் புலமையாளர் கௌரவிப்பு மாண்புறு விழா அதிபர்  எம்.ஏ.எம். பஜீர் தலைமையில்  கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானாவும்  கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடமொன்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கொழும்பில் உள்ள நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி ...

மேலும்..

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்: இன அழிப்பின் நீண்டகால தந்திரமே மகாவலி அதிகார சபை செயல்பாடு! சார்ள்ஸ் நிர்மலநாதன் காட்டம்

மகாவலி அதிகார சபையின் செயற்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான செயற்பாடு தான் ...

மேலும்..

கல்முனை விவகாரம் முதல் முஸ்லிங்களின் பிரச்சினைகளை ஆராய அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் உபகுழு அமைப்பு!

அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக கல்முனை விவகாரம் தொடர்பில் ஆராயும் அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன விசேட கூட்டம் கடந்த சனிக்கிழமை சம்மேளனத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் ...

மேலும்..

மனிதநேய செயற்பாட்டாளர் டேவிட் நல்லரத்தினத்துக்கு பக்ரைய்ன் நாட்டு அரசாங்கத்தால் மகத்தான கௌரவம்!

ஸ்கொட்லாந்தை தலைமையகமாக கொண்டு உலகளாவிய ரீதியில் மனித நேய பணிகளை முன்னின்று மேற்கொண்டு வருகின்ற Cross Ethnic Community சர்வதேச மனித நேய தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் டேவிட் நல்லரத்தினத்துக்கு பஹ்ரைய்ன் நாட்டு அரசாங்கத்தால் கடந்த நாட்களில் மகத்தான வரவேற்பு மற்றும் ...

மேலும்..

இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவம் 06 ஆம் கட்ட இறுதி ஒருநாள் பயிற்சி பட்டறை!

மனித மேம்பாட்டு அமைப்பால் இளைஞர், யுவதிகள், அமைப்பின் அங்கத்தவர்களுக்கான  6 கட்டங்களாக நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சி பட்டறையின்  இறுதிக் கட்டம் தன்னம்பிக்கை உள்ள எதிர்கால இளைஞர் யுவதிகளை உருவாக்குதல் எனும்  தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு கடந்த சனிக்கிழமை  வாழைச்சேனை தேசிய இளைஞர் ...

மேலும்..

சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பும், புதிய மாணவர் வரவேற்பும்

சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கலாபீடத்தின் ஆளுநர் சபை உறுப்பினரும், கல்விப்பிரிவு தலைவரின்  தலைமையில் கமுஃ கமுஃ அல்- ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. குர்ஆன் மனனமிடும் இஸ்லாமிய பல்கலைக்கழகமான தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் சட்டம்: ஏ.சுமந்திரனின் தனிநபர் பிரேரணைக்கு வரவேற்பு! சரத் என்.சில்வா பாராட்டு

புதிய மாகாண சபை சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் என்னைக் கடுமையாக விமர்சித்தார். மாகாண சபைத் தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள பின்னணியில் பழைய மாகாண சபைத் தேர்தலை நடத்த எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவந்துள்ளமை வரவேற்கத்தக்கது என ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் சட்ட விரோதமாக நிர்மாணங்கள் முழுமையான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை!  விதுர விக்கிரமநாயக்க கூறுகிறார்

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தொல்பொருளியல் திணைக்களத்தால் அடையாளம் காணப்படும் பகுதிகளில் பௌத்த ...

மேலும்..

சிம்பாப்வே போதகரை வரவேற்பதற்காக விமானநிலைய அதி உயர் பாதுகாப்பு பகுதிக்குள் சென்றார் ஜெரோம்!  அனுமதிவழங்கியது யார்? வெளியாகியது புதிய படம்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ கடந்த வருடம் சிம்பாப்வே போதகர் உபேர்ட் ஏஞ்சலை வரவேற்பதற்காக கொழும்பு விமானநிலையத்தின் மிகவும் பாதுகாப்பான பகுதிக்குள் எவ்வாறு சென்றார் என கேள்விகள் எழுந்துள்ளன. ஜெரோம் பெர்ணாண்டோ தனது தனிப்பட்ட செல்வாக்கையும் அரசியல்செல்வாக்கையும் பயன்படுத்தி பாதுகாப்பு ரீதியில் தடை ...

மேலும்..

ஆறு. திருமுருகனின் பிறந்த தினத்தில் தெல்லிப்பழையில் இரத்ததான முகாம்!

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும் சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகரும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமாகிய செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனின் 62 ஆவது பிறந்ததினம் இன்றாகும். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகசபை, தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம், துர்க்காதேவி மகளிர் இல்லம், ...

மேலும்..

பொலிஸ்காவல் ராஜகுமாரியின் மரணம்: பொலிஸ் அதிகாரிகளைக் கைதுசெய்க! மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்து

பொலிஸ்காவலின்கீழ் நிகழும் மரணங்கள் தொடர்பில் மீண்டும் கவனம் குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ள ராஜகுமாரியின் உயிரிழப்பு தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளைப் பணி இடைநிறுத்தம், பணி இடமாற்றம் செய்வதைவிடுத்து, அவர்களைக் ...

மேலும்..

டயமன்ட், பேர்ள் கப்பல்கள் தீ விபத்துக்கள்: 89 கோடி இந்திய ரூபா டெல்லிக்கு வழங்கல்!  நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

இலங்கை கடற்பரப்புக்குள் தீ விபத்துக்கு உள்ளான எம்.டி.நியூ டயமன்ட் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்களின் போது , தீயைக் கட்டுப்படுத்துவதற்காக உதவிய போது இந்திய கடற்படைக்கு 890 (89 கோடி இந்திய ரூபா) மில்லியன் இந்திய ரூபா செலவு ...

மேலும்..

போலி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை!  மனுஷ நாணயக்கார எச்சரிக்கை

வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து ...

மேலும்..