டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன ‘ஆபத்து’?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை சந்திக்க இருக்கிறது. அந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டால், இந்திய அரையிறுதிக்குச் செல்வதற்கு ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

ஏனென்றால் இந்தியா தோல்வியடையும்பட்சத்தில் 6 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் அணி, ரன் விகிதத்தை அதிகரித்துக் கொண்டு அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.