அரையிறுதிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்..! மண்ணை கவ்வியது பங்களாதேஷ்

அரையிறுதி

உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியின் குரூப் B யில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களைப் பெற்றது.

 

பங்களாதேஷ் அணி சார்பாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 54 ஓட்டங்களையும், அபிஃப் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பாகிஸ்தான் அணி

அரையிறுதிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்..! மண்ணை கவ்வியது பங்களாதேஷ் | Icc World Cup 2022 Match Pakistan Win Semi Final

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தது.

பாகிஸ்தான் அணியில் மொஹமட் ரிஸ்வான் 32 புள்ளிகளையும், மொஹமட் ஹரிஸ் 31 புள்ளிகளையும் பெற்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.