இருபது20 குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க பிசிசிஐ ஆராய்கிறது

இருபது20 போட்டிகளுக்கான இந்திய குழாமில் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனிக்கு முக்கிய பதவியொன்றை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 10 விக்கெட்களால் தோல்வியடைந்து வெளியேறியது.

இதையடுத்து. இந்திய அணியை மீளக் கட்டியெழுப்புவதற்கான வழிகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆராயந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இருபது20 போட்டிகளுக்கான குழாமில் மஹேந்திர சிங் தோனிக்கு முக்கிய பதவியை வழங்கி அவரை குழாமில் வைத்துக்கொள்வவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளிhயகியுள்ளது.

மற்றொரு முன்னாள் அணித்தலைவர் ராகுல் திராவிட் 3 வகைப் போட்டிகளுக்கும் இந்திய அணியின் பயிற்றுநராக உள்ளமை அவருக்கு பணிச்சுமையை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.

இதனால், இருபது20 போட்டிகளுக்கான குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.