FIFA இறுதி 16 : மூன்று அணிகள் தகுதி பெற்றன; இருஅணிகள் நொக் அவுட்

2022 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுப் போட்டிக்கு திங்களன்று தகுதி பெற்ற  பிரான்ஸுடன் பிரேஸில் மற்றும் போர்த்துகல் இணைந்துள்ளன. அதே நேரம் கட்டார் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு வெளியேற்றப்பட்ட, போட்டியை நடத்தும் முதல் நாடாகத் தொடர்ந்து பிரதிபலிக்கிறது.

நடப்பு சாம்பியன் பிரான்ஸ் சனிக்கிழமை டென்மார்க்கிற்கு எதிரான வெற்றியைப் பெற்ற பிறகு கடைசி 16 க்கு முன்னேறிய முதல் அணி ஆனது. பிரேஸில் மற்றும் போர்த்துக்கல் 48 மணி நேரத்துக்குப் பிறகு அதனுடன் இணைந்தன.

இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு போட்டியிலிருந்து வெளியேறும் கட்டார் அணி  மட்டுமன்றி ஞாயிற்றுக்கிழமை குரோஷியாவால் தகர்த்தெறியப்பட்ட பின்னர் குழு Fன் கீழுள்ள கனடாவும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.