போர்த்துகலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது மொரோக்கோ

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிக் போட்டிக்கு மொரோக்கோஅணி தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1:0 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரைஇறுதிக்கு மொரோக்கோ முன்னேறியது.

போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் யூசெப் என் நெசிரி கோல் புகுத்தினார்.

 

உபாதை ஈடு நேரத்தில் மொரோக்கோ வீரர் வலீத் செதேராவுக்கு 2 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டு அவை சிவப்பு அட்டையாக மாற்றப்பட்து. இதனால் கடைசி கட்டத்தில் 10 வீரர்களுடன் விளையாடு; நிலைக்கு மொரோக்கோ தள்ளப்பட்டது.

மொரோக்கோ அணி முதல் தடவையாக உலகக்கிண்ண அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளது

ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணியொன்று உலகக் கிண்ண அரை இறுதிக்கு தகுதி பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.

போர்த்துகல் அணி வீரர் கிறிஸ்டியானோ தொடர்ச்சியாக 2 ஆவது போட்டியிலும் ஆரம்ப வீரர்கள் வரிசையில் இடம்பெறவில்லை.

 

இன்றைய போட்டியில் அவர் 52  ஆவது நிமிடத்திலேயே களமிறக்கப்பட்டார்.  இப்போட்டியில் போர்த்துகல் தோல்வியுற்றபின் ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறினார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.