கொவிட்-19 எதிரொலி: கல்கரி நாட்டுப்புற விழா இரத்து!

கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) காரணமாக இம்முறை நடைபெறவிருந்த, கல்கரி நாட்டுப்புற விழா இரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரின்ஸ் தீவுக்கு சுமார் 53,000 பேரை அழைத்து வரும் இந்த விழா, எதிர்வரும் ஜூலை 23ஆம் முதல் 26ஆம் வரை திட்டமிடப்பட்டிருந்தது.

முக்கிய இசை நிகழ்வுக்கு 41ஆவது ஆண்டாக அமையவிருந்த நிகழ்வும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு திருவிழாவில் முன்பதிவு செய்யப்பட்ட பல கலைஞர்கள் அதற்கு பதிலாக 2021ஆம் ஆண்டில் தங்களது நிகழ்ச்சிகளை நிகழ்த்துவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.