மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மீண்டும் கூடும் பொதுச்சபை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களின் போது மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் பொதுச்சபை மீண்டும் கூடவுள்ளது.

கொவிட்-19 தொடர்பான சிறப்பு அனைத்து கட்சி குழுவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டிற்கும் விகிதாசாரமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் புதன்கிழமை வெஸ்ட் பிளாக்கில் நேரில் சந்திக்க உள்ளனர்.

மத்திய அரசின் வாக்குறுதியளிக்கப்பட்ட இந்த சட்டத்தை பின்னர் நிறைவேற்ற அவர்கள் சபையின் முறையான கூட்டத்திற்கு வருவார்கள்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அவசரகாலச் சட்டத்தின் மூன்றாவது பகுதியாக புதிய சட்டமூலம் ‘கனடா அவசர மாணவர் நலன்களை மதிக்கும் சட்டம்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.