கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.

சமீபத்திய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக 74,613பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில், 90பேர் உயிரிழந்ததோடு, 1,212பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தமாக 5,562பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 32,156பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 36,895பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.