மூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கும் உதவித் தொகை, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்களுக்கு 500 டொலர் வரை ஒரு முறை செலுத்துதல் தொகைக்காக கூட்டாட்சி அரசாங்கம், 2.5 பில்லியன் டொலர்கள் நிதியை ஒதுக்கியுள்ளது.

முதியோர் பாதுகாப்பு நலனுக்காக தகுதி பெற்றவர்கள் 300 டொலர் வரிவிலக்கு செலுத்த தகுதியுடையவர்கள். உத்தரவாத வருமான கூடுதல் தொகை பெறுபவர்களுக்கு கூடுதல் 200 டொலர் கிடைக்கும்.

இரண்டு தகுதிகளுக்கும் தகுதி பெற்ற 2.2 மில்லியன் மூத்தகுடிமக்கள் 500 டொலர் பெறுகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.