தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர் ரிஷப் பண்ட் இன்றைய ஆட்டத்தின் மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டத்தின் 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தற்போது விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதில் இரு அணிகளும் முனைப்பாக உள்ளன.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர் ரிஷப் பண்ட் குறைந்த டெஸ்ட் தொடர்களில் 1000 ரன்கள் அடித்த புதிய சாதனையை படைத்துள்ளார். 27 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை குவித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 32 இன்னிங்ஸில் 1000 ரன்களை ஈட்டி முன்னாள் கேப்டன் தோனி நிகழ்த்திய சாதனையே முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் அதை முறியடித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.