(வீடியோ)கல்முனையில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான  சூரை வகை மீன்கள் பிடிப்பு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது  பகுதியில்  உள்ள கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான சூரை வகை மீன்கள்  இன்றைய தினம் (22) அதிகளவில் பிடிக்கப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக  இப் பகுதியில்  கரைவலை மீன்பிடியானது கடந்த நாட்களில்  மிகவும்  குறைந்த  நிலையில் காணப்பட்ட நிலையில் கரைவலை மீனவர்களுக்கு  இவ் வகை  மீன்கள் அதிகளவில்  பிடிக்கப்பட்டது இதனால்  மீனவர்கள் மகிழ்ச்சி நிலையில் காணப்பட்டனர்.

குறிப்பாக இவ் சூரை   இன மீன்கள்  ஆழ்கடல் படகுகளுக்கே  அதிகமாக பிடிபடும் ஆனால்  இன்றைய தினம் கரைவலை தோணிகளுக்கு அதிகமாக பிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தகத்து.

மேலும் மேலதிக மீன்கள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக   அனுப்பிவைக்கப்படுகின்ற இதேவேளை இப் பிரதேசத்தில்  மீன்கள்  கருவாட்டுக்காய் பதனிடப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது .

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.