April 30, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய நாள் எப்படி – 01 மே 2024

01/05/2024 புதன்கிழமை  1)மேஷம்:- செய்யும் வேலைகளில் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுகளை சரி செய்ய நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். 2)ரிஷபம் :- சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வேலையை முடிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து நெருக்கடி வரலாம். 3)மிதுனம்:- கூட்டுத்தொழில் முயற்சியில் ...

மேலும்..

அனைத்து குற்றச்சாட்டில் இருந்தும் விடுதலையான மஹிந்தானந்த

அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை ...

மேலும்..

தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கு விஷேட அறிவிப்பு

வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 31.01.2007க்கு முன் பிறந்த பிரஜைகள் , வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் சென்று தங்களின் விபரங்கள் சரியாக ...

மேலும்..

மர்மமான முறையில் கொல்லப்பட்ட சட்டத்தரணி

வீடொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத பெண் ஒருவரை படுக்கையறையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்திள்ளனர். தெஹிவளை, களுபோவில வீதியில் வசித்து வந்த 64 வயதுடைய சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட ...

மேலும்..

நீதியமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

“சுதந்திர கட்சியை சீரழித்த மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தனது நற்பெயரை இல்லாதொழித்துக் கொள்ள கூடாது என்பதை மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் ...

மேலும்..

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இரா.சாணக்கியனுக்கும் இடையில் விஷேட சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது மாவட்ட மற்றும் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

பரீட்சை முடியும் வரை பல்வேறு தடைகள்

நடைபெறவுள்ள க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வு என்பவற்றை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க. பொ. ...

மேலும்..

மருத்துவ பீடத்தை நிறுத்த கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள மருத்துவ பீடத்தை நிறுத்துமாறு கோரி, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் பங்கேற்ற மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகத்தின் முன்பாக ...

மேலும்..

மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்த குசல் மெண்டிஸ்

2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போது இந்தியாவுக்கு எதிரான போட்டி தான் விளையாடிய சிறந்த போட்டி என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரபல ஊடக உரையாடல் நிகழ்ச்சியில் நேற்று ...

மேலும்..

யாசகம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுபவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களும் ...

மேலும்..

ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்த தடை

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை  பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் ...

மேலும்..

ஒரு கோடி இலஞ்சம் பெற்ற நால்வர் கைது

கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது ...

மேலும்..

நாளை நாட்டில் மதுபான விற்பனைக்கு தடை

நாட்டில் நாளை மே தின ஊர்வலங்கள் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் பிரதேச செயலகப் பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது. மதுபான விற்பனை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

மே தினத்தையொட்டி பொலிசாரின்அறிவிப்பு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு நகரை சுற்றி கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸார் அறிவித்துள்ளனர். மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

மேலும்..

மின்னல் தாக்குதலில் சகோதரங்கள் பலி

இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக தெரியவந்துள்ளதுடன் வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு  உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் ...

மேலும்..