இலங்கை செய்திகள்

பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் – அதிர்ச்சியில் மரணித்த மாணவியின் தாய்

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன்  நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிப்படையான கருத்தை வெளியிட்ட நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். “குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் க . பொ.த சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள்  எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை ...

மேலும்..

பாற்சோறுக்கு சர்வதேச ரீதியில் பாராட்டு

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா சமையல் போட்டியான மாஸ்டர்செஃப் அவுஸ்திரேலியாவில் (MasterChef Australia) இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்து பாராட்டுப் பெற்றுள்ளார். இலங்கையின் பாரம்பரிய காலை உணவான பாற்சோற்றின் விளக்கம் மற்றும் அதன் சுவைக்காக அவர் இவ்வாறு  நடுவர்களால் பாராட்டப்பட்டுள்ளார். பாற்சோற்றுக்கு ...

மேலும்..

ஈரான் அமைச்சரை கைது செய்யுமாறு இலங்கையிடம் கோரிக்கை

இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய உள்துறை அமைச்சரை கைது செய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா இலங்கையிடம் கோரியிருந்த நிலையில், குறித்த அமைச்சர் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸியுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என ஏஎஃப்பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது . 1994ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவின் தலைநகரில் ...

மேலும்..

இலங்கையை வந்தடைந்தார் இப்ராஹிம் ரைசி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதற்கமைய  ...

மேலும்..

பலத்த பாதுகாப்புடன் சாட்சியமளிக்க வந்த நீதிபதி இளஞ்செழியன்

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

பால்மா விலை குறைப்பு

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 250 முதல் 300 ரூபாவினால் குறைக்கப்படும் என குறித்த ...

மேலும்..

எல்ல பகுதியில் இருந்து 10 குடும்பங்கள் இடம்பெயர்வு

எல்ல கரடகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் இன்று (24) மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் முன்பு பெரிய அளவில் நீர் ஓடிக் கசிந்துகொண்டிருந்ததாகவும் , ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்குழு

ஈஸ்டர் குண்டு தாக்குதலின் உண்மையை வெளிக்கொணர ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் விசேட விசாரணைக் குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றய பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு வழக்கு ஒத்திவைப்பு

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும் அதிபர் சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் ...

மேலும்..

கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் கைது – அவசர பொலிஸ் இலக்கம் அறிவிப்பு

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மோசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் ...

மேலும்..

பதவியை பொறுப்பேற்றார் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்று சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக இருந்த, யாழ்ப்பாணம் ...

மேலும்..

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து இன்று முதல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த வருடத்தின் பாடசாலை முதலாம்  தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகி அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் அடுத்த மாதம் ...

மேலும்..