November 17, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தொழில் நிமித்தம் கம்பஹா சென்ற யாழ். குடும்பஸ்தரை காணவில்லை!

தொழில் நிமித்தனம் கம்பஹா சென்ற தனது கணவருடன் இதுவரை எவ்வித தொடர்பும் இல்லையென அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று கம்பஹா மாவட்டத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன்  வடக்கைச் சேர்ந்த கணேசலிங்கம் ...

மேலும்..

பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இணையும் இலங்கையின் விண்ணப்பம் குறித்து விசேட அவதானம்!

பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில்  இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்து பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரக்க பாலசூரிய, வியட்நாம் தூதுக்குழுவினருக்கிடையிலான சந்திப்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் காலம் உறுப்பினரும், வியட்நாமின் மாகாணக் கட்சிக் குழுவின் செயலாளருமான புய் வான் ங்கியெம் ...

மேலும்..

புலமைப்பரிசில் வழங்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்! அமைச்சர் சுசில் உத்தரவாதம்

புலமைப்பரிசில் வழங்கும் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வோம். அவ்வாறு  நடவடிக்கை எடுத்தால்  வெட்டுப்புள்ளி மேலும் சிறிது குறைவடையும். அத்துடன் ஐந்தாம் தர புலமைப் பரிசிலுக்காக ஒதுக்கப்படும் 750 ரூபாவை ஆயிரம் ரூபாவாக  அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்  என கல்வி அமைச்சர் சுசில் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதியும் அரசும் பொறுப்புக் கூறவேண்டும்! சாடுகிறார் சஜித் பிரேமதாஸ

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதானிகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டது. அதனால் இந்த பிரதானிகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் பாதுகாப்பதாக இருந்தால் கிரிக்கெட் தடைக்கு இவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

விற்பதற்கு எதுவும் இல்லாததால் ஜனாதிபதி நாட்டின் நீர் வளத்துக்கும் விலைபேசுகிறார்! விஜித ஹேரத் போட்டுத்தாக்கு

காணி மற்றும் அரச கட்டடங்களுக்கு விலை பேசி முடிந்த நிலையில் விற்பதற்கு ஏதும் இல்லாத காரணத்தால் தற்போது நாட்டின் நீர் வளத்துக்கும் விலைபேசப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் டிஸ்டிலேன்டை காண்பித்து ஒட்டுமொத்த மக்களையும் சோமாலியாவுக்குள் தள்ளும் முன்மொழிவுகளை ஜனாதிபதி ...

மேலும்..

தரமற்ற எரிபொருள் விநியோகம் தொடர்பான சஜித்தின் கூற்றில் எந்த உண்மையுமில்லை! அடியோடு மறுக்கிறார் அமைச்சர் காஞ்சன

நாட்டில் தரமற்ற எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றை முற்றாக நிராகரிக்கிறோம். அத்துடன் அவ்வாறு தரமற்ற எரிபொருளை விநியோகிக்க நாங்கள் அனுமதி வழங்கியிருந்தால் அதுதொடர்பில் நீதிமன்றத்தை நாடலாம் என  மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

கோட்டாவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு சாட்டை அடியாம்! லக்ஷ்மன் கிரியெல்ல வைகிறார்

உயர் நீதிமன்றம் பொருளாதாரக் கொலை தொடர்பாக வழங்கி இருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியமானதாகும். ஆட்சியாளர்கள் அநீதியான முறையில்  பணம் சம்பாதித்திருந்தால், அது தொடர்பில் தேடிப்பார்க்க தயாராக இருக்கிறது என்ற செய்தியையும் இதன் மூலம் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் நீதிமன்றத் தீர்ப்பு ...

மேலும்..

நாணய நிதிய நிபந்தனைகளுக்கு அமைய வரவு – செலவு திட்டமெனில் அரசு எதற்கு? ஹரிணி அமரசூரிய கேள்வி

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் நாட்டை முன்னேறக்கூடிய எந்தத் திட்டமும் இல்லை. நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப வரவு செலவுத் திட்டம் இருக்குமாயின் நாட்டில் அரசாங்கம் எதற்கு? இதன் பின்னரும் ஜனாதிபதியால் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற ...

மேலும்..

பொருளாதார பாதிப்பு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பினால் முரண்பாடுகள் தோற்றம் பெறும்! பந்துல கூறுகிறார்

மத்திய வங்கியின் அதிகாரத்தை நாடாளுமன்றத்தைத் தவிர்த்து பிற தரப்பினரால் கேள்விக்குள்ளாக்க முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொருளாதாரப் பாதிப்பு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால் சட்டவாக்கத்துறைக்கும், நீதித்துறைக்குமிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும்  பந்துல குணவர்தன மேலும் ...

மேலும்..

கிறிஸ்தவ மதகுருமார் கண்காணிக்கப்படுகின்றனர்! எங்கள் தொலைபேசிகள் பாதுகாப்பாக இல்லை! நாங்கள் சுதந்திரமாக பேசமுடியாதநிலைமையில்! அச்சப்படுகிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த  சுயாதீன விசாரணைகளுக்கான சர்வதேச அழுத்தங்களை தீவிரப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா உதவவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏபிசிக்கு கர்தினால் இதனை தெரிவித்துள்ளார். 270பேருக்கும் என்ன நடந்தது? அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிவதற்காக சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் ...

மேலும்..

ஜெரோம் பெர்னாண்டோவை கைதுசெய்ய வேண்டாம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் போது அவரை கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது. ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை வந்தடைந்ததன் பின்னர் 48 மணித்தியாலத்துக்குள் அவரிடம் ...

மேலும்..

23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகள பெற்று சித்தியடைந்துள்ளார். 2000 ஆண்டிற்கு பின்னர் அதாவது 23 வருடங்களின் பின்னர் இம்முறைதான் மாணவியொருவர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். பாடசாலைக்கு தனது ...

மேலும்..

தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவுபடக் காரணம் : அமைச்சர் மனுஷ நாணயக்கார!

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நமக்கு நாம் மட்டுமே என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நல்லிணக்கம் ...

மேலும்..

மாலைதீவு ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹை நேற்று வியாழக்கிழமை (16) மாலை மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி சோலிஹ் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் தற்போதைய ...

மேலும்..

பொருளாதார படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது – அனுரகுமார

பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. ஆனால் பொருளாதார பாதிப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே, இந்த தெரிவுக்குழு பயனற்றது. அரச நிதியையும், காலத்தையும் வீணடிக்காமல் இந்த தெரிவுக்குழுவை இரத்து செய்யுங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க ...

மேலும்..

காஸாவில் அமைதியை ஏற்படுத்த எமது நாடு உலக நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம் கோரிக்கை

இஸ்ரேல் இராணுவத்தினரால் காஸாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையை நிறுத்தி அங்கு அமைதியை ஏற்படுத்த எமது நாடு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வரவு ...

மேலும்..

ருவாண்டாவின் உள்ளூராட்சி அமைச்சரை சந்தித்தார் ஊவா மாகாண ஆளுநர்

ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் MUSABYIMANA Jean Claude மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலுக்கு இடையிலான சந்திப்பொன்று ருவாண்டா உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது. ருவாண்டாவில் நிகழ்த்தப்படும் 10வது பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற மாநாட்டுடன் இணைந்ததாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது 2023 ...

மேலும்..

தெனியாயவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து : பஸ் நடத்துனருக்கு காயம்

இரத்தினபுரி - தெனியாயவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (17) அதிகாலை விபத்துக்குள்ளானது . தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வாதுவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த ...

மேலும்..

கடந்த 2 ஆண்டுகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு 17 சிறுவர்கள் கொலை – துஷ் விக்கிரமநாயக்க

இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு 17 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறுவர்கள் மீதான வன்முறைகளை நிறுத்துங்கள் அமைப்பின் தலைவர் துஷ் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு இதுவரை முறையான தண்டனை வழங்கப்படவில்லை என்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளை ...

மேலும்..