குருநாகல் பகுதியில் சிறுவன் உயிரிழப்பு!
கழிவு நீர் வாய்க்காலில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று(05-09-2022) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில், கழிவு நீர் வாய்க்கால் அருகில் பாடசாலை பை ஒன்று இருப்பதனை கண்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த வாய்க்காலில் பாடசாலை சிறுவன் சிக்குண்டு இருப்பதனை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, குருநாகல் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைககளில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு சிகிக்கைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை