கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்து கைதி உயிரிழப்பு..

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் உத்தியோகத்தர்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.