தீபாவளி பண்டிகை -இரண்டு கோடி ரூபாவிற்கு விலைபோன ஆடுகள்!!

தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் கடும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வரும் திங்கட்கிழமை (ஒக்டோபர் 24 ஆம் திகதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஆடு விற்பனை சூடு பிடித்துள்ளது.

இதன்படி திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நடந்த ஆட்டு சந்தையில் ஒரே நாளில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. வேடசந்தூர் தாலுகாவில் உள்ள மலை சார்ந்த கிராமமான அய்யலூரில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்போர், வியாபாரிகள் ஆகியோர் இந்த சந்தையில் பெருமளவில் கலந்துகொள்வர். அந்த வகையில் நேற்று காலை சந்தை தொடங்கியது. மக்கள் தங்களது ஆடுகளுடன் சந்தைக்கு வர , ஆரம்பம் முதலே வியாபாரம் சூடுபிடித்தது. சில மணிநேரங்களிலேயே இங்கு கொண்டுவரப்பட்ட ஆடுகள் சுமார் 2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

நல்ல இலாபம்

தீபாவளி பண்டிகை -இரண்டு கோடி ரூபாவிற்கு விலைபோன ஆடுகள் | Deepavali 2 Crore Worth Goats Sold

 

கடந்த சில ஆண்டுகளில் கொரோனா காரணமாக ஆட்டு சந்தை பெரியளவில் நடக்கவில்லை என்றும், ஆனால் இந்த வருடம் நல்ல இலாபம் கிடைத்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தீபாவளியை முன்னிட்டு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஆடுகள் விற்பனையாகின. இங்கே ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று ஆட்டு சந்தை நடைபெறுவது வாடிக்கை.

அதன்படி இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் ஆடு வளர்ப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல, நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆட்டு சந்தையிலும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.